பொதுத் தேர்தலில் நாமல் குமார, தாமரை மொட்டில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிப்பு

🕔 November 13, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித் திட்டம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நாமல் குமார, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அமைப்பொன்றின் தலைவர் எனக் கூறப்படும் நாமல் குமார; தாமரை மொட்டினை சின்னமாகக் கொண்ட பொதுஜன பெரமுன கட்சி சார்பாக, அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பொதுஜன முன்னணியின் தலைவர் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதம் தனக்கு உள்ளது என்றும் நாமல் குமார தெரிவித்துள்ளதாக, ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்