மாந்தை மேற்கில் 2.5 கோடி ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள்; றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்

🕔 September 18, 2018

மைச்சர் றிஷாட் பதியுதீனின் முயற்சியால் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பெரியமடு கிராமத்திற்கான 2.5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நவ்பீலின் தலைமையில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இவ் வேலைத்திட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார்

இத்திட்டத்தின் கீழ் பின்வரும் அபிவிருத்திகள் இடம்பெறவுள்ளன.

பெரியமடு கிழக்கு ஜாமிஉல் அக்சர் ஜும்மா பள்ளிவாசல் சுற்றுமதில் நிர்மாணம்,
பெரியமடு மேற்கு பள்ளிவாசல் சுற்றுமதில் நிர்மாணம், பெரியமடு மத்திய மகா வித்தியால நூலகம் அமைப்பு, பெரியமடு கிழக்கு ஆரம்ப நெறி பாடசாலை நுழைவாயில் நிர்மாணிப்பு மற்றும் பெரியமடு காயா நகர் பள்ளிவாயல் சுற்றுமதில் நிர்மாணம்.

மேலும் இந்நிகழ்வில் மாந்தை உப்புக்கூட்டுத்தாபன தலைவர் அமீன், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியேகு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், வட மாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் முனவ்வர், மாந்தை பிரதேச சபை உறுப்பினர்கள் தேசிய மீள்குடியேற்ற செயலணி மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் ரகுமான், மற்றும் மாந்தை இணைப்பாளர் சனூஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்