லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு, இந்த வருடம் 1398 முறைப்பாடுகள்
லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், 1398 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றில் 908 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் தொடங்கியுள்ளதாக விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்ரசிறி கூறியுள்ளார்.
கடந்த வருடத்தில் 2768 முறைப்பாடுகள் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்குக் கிடைத்ததாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்ரசிறி மேலும் தெரிவித்தார்.