ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை; அபராதமும் விதிப்பு

🕔 June 14, 2018

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞனாசார தேரருக்கு ஆறுமாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து  அச்சுறுத்தியமை ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி அறிவித்தது.

இந்த நிலையில் ஹோமாகமக நீதிவான் உதேஷ் ரணதுங்க அவருக்கு எதிரான தண்டனையை இன்று அறிவிக்கவுள்ளதாக முன்பே அறிவித்திருந்தார். அதற்கிணங்கள இவருக்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குற்றச்சாட்டுக்கு தலா 1500 ரூபா வீதம் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் மொத்தமாக 3000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் எக்னெலிகொடவின் மனைவிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்