சுதந்திரக் கட்சியின் செயலாளராகிறார் எஸ்.பி. திஸாநாயக்க
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது.
சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதன்போது சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் செயலாளர் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளவுள்ளதாக அறிய முடிகிறது.
இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்.பி.திஸாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக சுசில் பிரேமஜயந்தவும் நியமிக்கப்படவுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தற்போதைய பொதுச் செயலாளர்களாக முறையே துமிந்த திஸாநாயக்க மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.