அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்க மறியலும் நீடிப்பு

🕔 May 14, 2018

கசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இவர்கள் தெல்தெனிய நீதிவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது,  இவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்