பிரதமர் பொகவந்தலாவை விஜயம்: கோல்ஃப் மைதானம் அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார்

🕔 April 17, 2018

– க. கிஷாந்தன் –

பொகவந்தலாவையை பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில்  கோல்ஃப் விளையாட்டு மைதானம் ஒன்றையும், உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்கான இடங்களை பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை பொகவந்தலாவை பிரதேசத்துக்கு விஜயம் செய்தார்.

பொகவந்தலாவையை உல்லாசப் பிதேசமாக மாற்றும் பொருட்டு, அங்கு மேற்படி நிர்மாண வேலைகள் இடம்பெறவுள்ளன.

பிரதமரின் விஜயத்தின்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ மற்றும் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பிரதி தலைவர் ஏ.எம். பாமிஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்தனர்.

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலத்தில், ஹட்டனுக்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகாக  வருகை தந்திருந்த பிரதமர், நுவரெலியா மாவட்டத்தில் சில பகுதிகளை வெளிநாட்டு உல்லாச பயணிகள் விரும்பும் இடங்களாக மாற்றியமைக்க போவதாக தெரிவித்திருந்தார்.

இதற்கமைவாக பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் விரும்பதக்க பிரதேசமாக மாற்றியமைக்கும் நடவடிக்கையை இன்று பிரதமர் முன்னெடுத்தார்.

அந்தவகையில் பொகவந்தலாவ டின்சின் தோட்டத்திற்கு விசேடமாக வருகை தந்த பிரதமர் அத்தோட்டத்தில் கோல்ப் மைதானம் ஒன்றையும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பயணிகள் தங்கிருந்து பார்வையிடுவதற்கான உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்