கண்டி கலவரத்தில் முஸ்லிம்களுக்கான இழப்பு; அறிக்கை தயாரிப்பில் குரல்கள் இயக்கம்
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தின் இழப்புகளை மதிப்பீடு செய்வதற்கான கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ள குரல்கள் இயக்கம், அது தொடர்பான இறுதி அறிக்கையினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
குறித்த கள ஆய்வினை மேற்கொள்ளும் பொருட்டு, குரல்கள் இயக்கத்தின் ஆய்வுக்குழுவினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கண்டிக்கு இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டனர்.
குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள், இழப்பீடு அளவிடும் பொறியிலாளர்கள் உள்ளிட்ட கள ஆய்வுக் குழுவினர், பாதிக்கப்பட்ட இடங்களான திகன, அக்குறணை, கடுகஸ்தோட்டை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு ம் சென்று, தகவல்களைத் திரட்டியதோடு பாதிக்கப்பட்ட மக்களோடும் கலந்துரையாடினர்.
இழப்புகள் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்வது, அவற்றின் பிரதிகளைப் பெறுவது மற்றும் முறைப்பாடு செய்வதற்கான வழிகாட்டல்கள் போன்ற கலந்துரையாடலொன்றினை நேற்று ஞாயிற்றுக்கிழமை திகன ஜும்மா பள்ளிவாயலில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முஹைமின் காலித் மற்றும் அஸ்ஹர் லதீப் ஆகியோர் நடத்தினர்.
குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள், இழப்பீடு அளவிடும் பொறியிலாளர்கள் உள்ளிட்ட கள ஆய்வுக் குழுவினர், பாதிக்கப்பட்ட இடங்களான திகன, அக்குறணை, கடுகஸ்தோட்டை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு ம் சென்று, தகவல்களைத் திரட்டியதோடு பாதிக்கப்பட்ட மக்களோடும் கலந்துரையாடினர்.
இழப்புகள் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்வது, அவற்றின் பிரதிகளைப் பெறுவது மற்றும் முறைப்பாடு செய்வதற்கான வழிகாட்டல்கள் போன்ற கலந்துரையாடலொன்றினை நேற்று ஞாயிற்றுக்கிழமை திகன ஜும்மா பள்ளிவாயலில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முஹைமின் காலித் மற்றும் அஸ்ஹர் லதீப் ஆகியோர் நடத்தினர்.
இழப்பீடு அளவீடுகள் சம்பந்தமான ஆலோசனைகளை பொறியியலாளர்களான ஜௌஸி, காமில் மற்றும் பஸீல் ஆகியோர் வழங்கியதோடு, அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
கள ஆய்வில் குரல்கள் இயக்கத்தின் அங்கத்தவர்களான பல்கலைக்கழக மாணவர்களுடன் தன்னார்வச் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
கண்டி கலவரத்தின் போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில், குரல்கள் இயக்கத்தின் ஆய்வுக்கு தற்போது ஈடுபட்டு வருகிறது.