சமூக விடயங்களில் சட்டப் பணியாற்றி வந்த ரத்தீப் அஹமட்: இள வயதில் நீதிபதியாகிறார் 0
– முன்ஸிப் அஹமட் – சமூக விடயங்களில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக, ஒரு சட்டத்தரணியாக நீண்ட காலம் உழைத்து வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.எஸ். ரத்தீப் அஹமட் – நீதிபதியாக எதிர்வரும் முதலாம் திகதி கடமையினைப் பொறுப்பேற்கவுள்ளார். நீதிபதி தேர்வில் அண்மையில் சித்தியடைந்த ரத்தீப் அஹமட், சட்டத்தரணியாகி 07 வருடங்களுக்குள் நீதிபதியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 33