நேற்று பிரதியமைச்சரான முத்து சிவலிங்கம், இன்று இ.தொ.கா. தலைவர் பதவியை இழந்தார்

🕔 February 16, 2018

– க. கிஷாந்தன் –

லங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து முத்து சிவலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை விலகியுள்ளார்.

நேற்றைய தினம் பிரதியமைச்சர் பதவியினைப் பெற்றுக் கொண்ட நிலையில், மேற்படி பதவி விலகல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், செயலாளர் பதவியுடன் தலைவர் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டார்.

அதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளர் பொறுப்பை மருதபாண்டி ரமேஷ்வரன் பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல் கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூடிய தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை காலமும் காங்கிரஸின் தலைவராக செயல்பட்ட வந்த பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, தான் தலைவர் பதவியிலிருந்து விலகி கொள்வதாக தெரிவித்திருந்தார்.

அதேவேளை அவருக்கு காங்கிரஸின் போசகராக பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, நிதி காரியதரிசியாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரனை நியமிக்க, நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இந்த பதவியை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக ஆறுமுகன் தொண்டமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

இந்த ஊடக சந்திப்பில் மத்திய மற்றும் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான், உப தலைவர் கணேசமூர்த்தி, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், ஏ.பி.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்,

“மிக நீண்ட நாட்களாக பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என ஜனாதிபதியின் ஊடாக வழியுறுத்தப்பட்டு இருந்து. ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம்.

இவருடன் இணைந்த பிறகு நாம் பதவிகளை பெற்றுக்கொள்வோம் என எண்ணியிருந்தோம். அதேவேளை நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இவருடன் இணைந்து பாரிய வெற்றிகளை பெற்றுக்கொண்டதனால் இந்த பிரதி அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்