உள்ளுராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும்: அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் என்று, கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினார்.
மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும், தான் கட்சி மாறப் போவதில்லை என்றும், எந்தவொரு அணியுடனும் இணைந்து செயற்படப் போவதில்லை எனவும் அவர் இதன் போது உறுதிபடத் தெரிவித்தார்.