ஏறாவூரில் வீதி புனரமைப்பு; அமைச்சர் ஹிஸ்புல்லா ஆரம்பித்து வைத்தார்

🕔 October 2, 2017
– ஆர்.ஹஸன் –

றாவூர் – ஹிதாயத் நகர் வீதியை 14 மில்லியன் ரூபா நிதியில் புனர்நிர்மாணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இந்த நிதியினை ஒதுக்கியுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சுபைரின் தலைமையில் நடைபெற்ற மேற்படி ஆரம்ப நிகழ்வில், ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முடுக்கி விட்டுள்ள ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுபைரின் வேண்டுகோளுக்கிணங்க ஏறாவூரிலும் பல அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதற்கமைய, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ‘ஆயிரம் கிலோ மீற்றர் வீதி புனரமைப்பு’ திட்டத்தின் கீழ், ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து ஏறாவூர் – ஹிதாயத் நகர் வீதி 14 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்