20ஆவது திருத்தத்துக்கு எதிராக, ஊவா வாக்களிப்பு
நாட்டிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துவதற்காக மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஊவா மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை வாக்களிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாகாண சபைகளையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசியல் திருத்தத்துக்கு எதிராக 12 வாக்குகளும், ஆதரவாக 05 வாக்குகளும் வழங்கப்பட்டன.
எவ்வாறாயினும், வடமத்திய மாகாண சபையில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இது தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில், திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டது. அந்த வகையில், 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக 15 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன.