கிரிக்கட் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில், அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

🕔 July 23, 2015
Mujibur Rahman - 095கெத்­தா­ராம மைதா­னத்தில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின்போது, ரசிகர்களிடையே ஏற்­பட்ட மோதல் சம்பவத்தில்,  பொலிஸார் நியாயமற்­ற­ மு­றையில் நடந்­து­கொண்டதாகவும், குற்றச்செயல்­களில் ஈடு­ப­டாத, அப்­பாவி முஸ்லிம்  இளை­ஞர்­க­ளை கைது செய்துள்ளதாகவும், மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்; கெத்­தா­ராம ஆர். பிரே­ம­தாஸ விளையாட்டரங்கில், கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமையிரவு இடம்­பெற்ற நிகழ்வும், அதற்கு பின்னரான  சம்பவங்களும் கண்டிக்­கத்­தக்­க­வையாகும்.

பார்வையாளர்கள் இரு­வ­ருக்­கி­டை­யி­லான முறு­கலே, பெரும் பிரச்­சி­னையை ஏற்படுத்தியுள்ளது. பார்த்திருப்பாளர் பகுதியில் இருந்த தரப்­பி­ன­ரா­லேயே, பள்ளிவாசலுக்கு, கல் எறி­யப்­பட்­டுள்­ளன. அத்­துடன், மைதா­னத்­திற்கு வெளியில் இருந்­த­வர்­களால், விளையாட்டரங்கை நோக்கி கற்கள் எறியப்பட்­டுள்­ளன. இச் செயல்களை பொலி­ஸாரால் தடுத்­து­நி­றுத்த முடி­ய­வில்லை.

ஆனால், இந்த சம்­ப­வங்களுடன் தொடர்­பற்ற அப்­பாவி இளை­ஞர்கள் இரு­வரை, மாளி­கா­வத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் எந்­த­வி­த­மான தக­ரா­றிலும் ஈடு­ப­டாது, கிரிக்கட்போட்டியை பார்க்கச் சென்­ற­வர்­களாவர். போட்­டியை பார்த்து விட்டு, வெளியில் வரும்போது, அநியாயமாக இவர்கள் கைதா­கி­யுள்­ளனர்.

எனவே, இது விடயத்தில் சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, கைது செய்பட்டுள்ள அப்பாவி இளைஞர்களை, உடனடியாக விடுவிக்க வேண்டுமென, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்