சவூதி இளவரசர் காத்தான்குடி விஜயம்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அழைத்துக் கௌரவித்தார்

🕔 July 24, 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் –

வூதி அரேபிய நாட்டின் இளவரசரும், முன்னணி முதலீட்டாளருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில், இவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

காத்தான்குடிக்கு நேற்று விஜயம் செய்த இளவரசரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

கொழும்பில் இருந்து இலங்கை விமானப் படையின் விமானம் மூலம், இலங்கை விமானப் படையின் மட்டக்களப்பு தளத்திற்கு வருகைதந்த சவூதி அரேபிய நாட்டின் இளவரசர், காத்தான்குடிக்கு அழைத்து வரப்பட்டார்.

கிழக்கு மாகாணத்துக்கு இளவரசர் வருகை தந்தமை, இதுவே முதல் தடவையாகும்.

ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், இளவரசருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டதோடு, அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் விஷேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டார்.

இதன்போது, பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு கெம்பஸின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், அஷ்ஷெய்யித் மசூர் மௌலானா, ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) மற்றும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து காத்தான்குடி பூர்வீக நூதனசாலை,ரிதிதென்னையில் அமைக்கப்பட்டுவரும்  மட்டக்களப்பு கெம்பஸ் ஆகியவற்றுக்கும் விஜயம் இளவரசர் செய்தார்.

இவ் விஜயத்தின்போது ரிதிதென்னை மட்டக்களப்பு கெம்பஸூக்கு விஜயம் செய்த இளவரசருக்கு, மட்டக்களப்பு கெம்பஸின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்