உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனித்தே போட்டியிடும்: செயலாளர் துமிந்த திஸாநாயக்க

🕔 July 22, 2017

திர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  தனித்துப் போட்டியிடும் என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி, தனது கை சின்னத்தில்தான் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ள சிறிய கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க, சின்னம் குறித்த தீர்மானத்தில் மாற்றம் கொண்டுவர இடமுள்ளது என்றும், அமைச்சர் துமிந்த சுட்டிக்காட்டினார்.

ஆயினும், ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ ல.சு.க. என்பன தனித்தே போட்டியிடுவது உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்