ராணுவத் தளபதிக்கு பதவி உயர்வு; படையணிகளின் பிரதானியாகவும் நியமனம்
ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வா, ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டு, பாதுகாப்பு படையணிகளின் பிரதானி பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பான அறிவித்தல் நாளை புதன்கிழமை வெளியிடப்படும் என, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படைகளின் பிரதானியாகப் பதவி வகித்த ‘ஏர் சீர்ஃப் மாஷல்’ கோலித குணதிலக, கடந்த 15ஆம் திகதி ஓய்வு பெற்றமையினை அடுத்து, அந்தப் பதவிக்கு, ராணுவத் தளபதி கிறிஷாந்த டி சில்வா நியமிக்கப்படவுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ராணுவத் தளபதியாகப் பதவி வகித்த சரத் பொசேகாவும், இதேபோன்று ஜெனரல் தரத்துக்கு உயர்த்தப்பட்டு, பாதுகாப்பு படையணிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.