ஐ.தே.கட்சி தலைமையகம் நோக்கி சூடு நடத்திய, பொலிஸ் உத்தியோகத்தர் கைது
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை நோக்கி இன்று திங்கட்கிழமை மாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, யானைச் சின்னம் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஐ.தே.கட்சி தலைமையகத்தின் அருகில் இருந்து அவர் தேவையற்ற விதத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, பொலிஸாரின் ஆரம்ப விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.