ஹக்கீம் தலைமையில் மார்க்க சொற்பொழிவு; தாருஸ்ஸலாமில் ஏற்பாடு

🕔 May 1, 2017

– சபீக் ஹுசைன் –

“ரமழானுக்குத் தயாராகுவோம்” எனும் தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நாளை செய்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறும் இந்த சொற்பொழிவினை மௌலவி எம். டபிள்யூ. எம். பஹ்ரூத்தீன் மிஸ்பாஹி நிகழ்த்தவுள்ளார்.

இந் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும்.

மாதத்தின் முதல் வாரம் மற்றும் நான்காம் வாரம் என, தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை, இவ்வாறான மார்க்க சொற்பொழிவுகள் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்