பெண்கள் 06 பேர் உட்பட, 285 சிறைக் கைதிகள் இன்று விடுதலை

🕔 January 8, 2017

prisoners-01145சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 285 கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றமையினை சிறப்பிக்கும் வகையில், நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களில் 06 பேர் பெண்களாவர்.

குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ், சிறிய குற்றங்களைப் புரிந்தவர்களே இவ்வாறு, ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை பெற்றுள்ளனர் என்று, சிறைச்சாலைப் பேச்சாளர் ரி.என். உபுதெனிய குறிப்பிட்டார்.

இவர்களில் அதிகமானோர் அபராதத் தொகையினைச் செலுத்த முடியாமல் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்