பயங்கரவாத காலத்தில் இழந்த காணிகளை மீளப்பெறும் நடவடிக்கை

🕔 September 30, 2016
sibly-farook-087யங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை 1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார்.

இதற்கான விசேட சட்டமூலம் கடந்த 2016 ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்விஷேட சட்டமூலம் 02 வருடங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை மிக விரைவாக எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை திரட்டி சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குகின்ற ஏற்பாடுகள் மிக விரைவாக செய்யப்படவிருப்பதால், இதற்கான விண்ணப்பப்படிவத்தினை கல்குடாத்தொகுதியிலுள்ளவர்கள் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் ஷிப்லி பாறூக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு பெற்றுக் கொள்ளும் விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 2016.10.05ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் பூரணப்படுத்தி மீண்டும், பிரதேச சபையில் ஒப்படைக்குமாறும் அவர் அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்