இன்டர் நியூஸ் ஊடக பயிற்சி நெறி: அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை சார்பில் பங்கேற்ற சுகிர்தகுமாருக்கு விருது

🕔 September 22, 2016

sugirtha-kumar-01– அஹமட் –

ன்டர் நியூஸ் சர்வதேச ஊடக நிறுவனம் நடத்திய ‘வன் சிறிலங்கா ஜேனலிசம் பொலோசிப்’ (One Srilanka Journalism Fellowship) பயிற்சி கற்கை நெறியின்  விருது வழங்கும் நிகழ்வில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் சார்பில் பங்கேற்ற, ஊடகவியலாளர் வி. சுகிர்தகுமார் தமிழ் மொழி மூலமான வெற்றியாளருக்கான விருதை பெற்றுக் கொண்டார்.

வி. சுகிர்தகுமார் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் உப செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சிங்கள மொழி மூலமான வெற்றியாளருக்கான விருதினை ராவய பத்திரிகையின் ஊடகவியலாளர் தரிந்து தனதாக்கிக் கொண்டார்.

கொழும்பு – 07 லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச தொடர்புகளுக்கும் உபாய ஆய்வுக்குமான நிறுவனத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை மேற்படி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இன்டர் நியூஸ் சர்வதேச ஊடக நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சாம் டி சில்வா தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய கலந்து கொண்டு பயிற்சி நெறியை பூர்த்தி செய்த தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான சுமார் 25 ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

கடந்த 06 மாத காலத்துக்கும் மேலாக நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில், நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 30 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.

இப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட ஊடவியலாளர்கள், நாட்டின் பல பிரதேசங்களிலுமுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரும்  60இற்கும் மேற்பட்ட விவரண கட்டுரைகளை, நாட்டின் பிரபல பத்திரிகைகள் மூலமாக வெளியிட்டிருந்தனர்

இவ்வாறு வெளியிடப்பட்ட கட்டுரைகளில் தெரிவு செய்யப்பட்ட 20 கட்டுரைகள் புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டதுடன், கட்டுரைகளை எழுதிய அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இவற்றுள் குறிப்பாக சமூக பிரச்சினைகள் தொடர்பான சிறந்த கட்டுரைகளை எழுதி வெளியீடு செய்ததுடன், சிறப்பாக பயிற்சியினை பூர்த்தி செய்த 08 ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த என்.ஹரன், தினகரன் பத்திரிகை நிருபர் வசந்தா அருள்ரெட்ணம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுமித்தி தங்கராசா, எங்கள் தேசம் நிருபர் அபுபக்கர் பாயிஸ், சுடர் ஒளி நிருபர் சனத், பிபிசி நிருபர் ராகுல் மற்றும் ராவய பத்திரிகையின் நிருபர் இந்துனில், டிலிசா, உள்ளிட்டவர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமாக கலந்து கொண்டவர்களில் இருவர் பயிற்சி கற்கை நெறியின் வெற்றியாளருக்கான விருதை பெற்றுக் கொண்டதுடன், இருவருக்கும் ஸ்மாட் கையடக்க தொலைபேசியும் பரிசாக வழங்கப்பட்டன.

நிகழ்வில் திறந்த பல்கலைக்கழக சமூகவியல் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹருனி அமரசூரிய, ஆய்வு அதிகாரி டீபான்சலி அபேயவர்த்தன, இணையத்தள ஊடக ஆய்வாளர் ஹஸ்ஸாலா அன்வர், இன்டர் நியூஸ் நிகழ்ச்சி உத்தியோகத்தர் சிபான் அகமட், ரொய்டர்ஸ் ஊடக நிறுவனத்தின் செய்தியாளர் சிகார் அனிஸ் மற்றும் அமந்த பெரோ, சிரேஸ்ட ஊடகவியலாளர் முசம்மில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.sugirtha-kumar-02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்