ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலையத்தை அமைச்சர் சாகல திறந்து வைப்பு; விசேட அதிதியாக றிசாத் பங்கேற்பு

🕔 September 18, 2016

otti-suttan-police-station-013
ட்டுசுட்டான் பிரதேசத்துக்கான புதிய பொலிஸ் நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், விஷேட  அதிதிகளான கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தருமலிங்கம் சித்தார்த்தன், டொக்டர் சி. சிவமோகன், எம்.எம்.எம். மஸ்தான், டக்ளஸ் தேவானந்தா மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா மற்றும் பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள் என பலர் இதன்போது வருகை தந்திருந்தனர்.otti-suttan-police-station-012

Comments

புதிது பேஸ்புக் பக்கம்