நோர்வே நிபுணருடன், றிசாத் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்
தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு தொடர்பான நோர்வே நிபுணரான ஆர்.எம். வொலன்ட் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில், அ.இ.ம.காங்கிரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் சட்டநிபுணர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது உத்தேச தேர்தல் முறை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் முஸ்லிம்களுக்குப் பொருத்தமான தேர்தல் முறைமை தொடர்பிலும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பேணக்கூடிய விதிமுறைகள் குறித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குழுவினர் வொலன்டிடம் எடுத்துரைத்தனர்.