திருகோணமலை கோணேஸ்வரா கல்லூரியிலும் ஹபாயாவுக்குத் தடை: தொடர்கிறது புடவைப் பயங்கரவாதம் 0
– அஹமட் – திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும் அந்தப் பாடசாலையின் அதிபர் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு நம்பகமாகத் தெரியவருகிறது. அவ்வாறு முடியாது விட்டால் வேறு பாடசாலையொன்றுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும், குறித்த ஆசிரியையிடம் அதிபர் கூறியுள்ளார்.