திடீர் பணக்காரர்களான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்: விசாரணைகள் ஆரம்பம்
சிறைச்சாலை உத்தியோகத்தர்களில் கணிசமானோர் திடீர் பணக்காரர்களாகி உள்ளதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை அதிகாரிகள் தொடக்கம் உதவி உத்தியோகத்தர்கள் வரை, அனைவரும் தங்கள் சொத்துக்கள் மற்றும் வருமானத்தினை தெரியப்படுத்துதல் வேண்டும்.
ஆயினும், மேற்படி உத்தியோகத்தர்கள், தமது சொத்துக்கள் பற்றிய பொய்யான தகவல்களை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர்கள் தொழில் பெற்றதிலிருந்து கொள்வனவு செய்த சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் போன்ற விபரங்களை, அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ளடக்கவில்லை எனவும் தெரியவருகிறது.
இதேவேளை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவர், கொழும்பு – ஆனந்த ராஜகருண மாவத்தையிலும், கம்பஹாவிலும் அண்மையில் சொத்துக்கள் வாங்கியமை குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவருகிறது.