பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்ரான் கான், ஓகஸ்ட் 14க்கு முன் பதவியேற்பார்

🕔 July 29, 2018

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதவியேற்பார் என, இன்ரான்கானின் தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி அறிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி பாகிஸ்தானின் சுதந்திரமாகும்.

இந்த நிலையில், புதிய பிரதமராக பதவியேற்கும் இம்ரான்கானுக்கு ஏராளமான சவால்கள் காத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும், ஊழல் வழக்கில் சிறையில் இருப்பவருமான நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்–இ–இன்சாப் (பி.டி.ஐ.) மற்றும் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் போட்டியிட்டன.

இதில் வெளியான முடிவுகளின்படி இம்ரான்கானின் தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி அதிகபடியான ஆசனங்களை வென்று, பாகிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்