அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்ற முஸரப்; நீதிபதி அப்துல்லாவினால் கௌரவிப்பு

🕔 May 3, 2018

– அஹமட் –

ம்முறை வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி, அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்திகளைப் பெற்ற அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர் ரி. முஸரப் மௌலானா அண்மையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

அட்டாளைச்சேனையின் ஆளுமைகளைப் பாரட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்றது.

சிறகுகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், இம்முறை வெளியான க.பொ.த. சாதரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர் ரி. முஸரப் மௌலானாவை, சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி, மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லா கௌரவித்தார்.

கௌரவம் பெற்ற முஸரப் – கூட்டுறவு சங்க முகாமையாளர் தௌபீக் (தாஜுர்) – சியானா தம்பதியினரின் புதல்வராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்