மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு இணக்கம்

🕔 April 7, 2018

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அதிகளவானோர் இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், ஒரே தினத்தில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை நடத்துவதற்கும் இதன்போது இணக்க்கம் காணப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை கூடவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும், அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

விகிதாசார முறைப்படி நடைபெற்று வந்த மாகாண சபைத் தேர்தலை, தொகுதி வாரியாக நடத்தும் பொருட்டு, மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே, பழைய தேர்தல் முறைக்கு மீளவும் திரும்புவதற்கான பேச்சுக்கள் அரசியலரங்களில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்