09 மணிக்குள் 75 வீதமான முடிவுகள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

🕔 February 10, 2018

டந்து முடிந்த தேர்தலில் 75 வீதமான வட்டாரங்களின் முடிவுகள் இன்று இரவு 9.00 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிறைவு பெற்ற பின்னர் தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, வாக்களிப்பின் போது பாரிய வன்முறைச் சம்பவங்கள் எவையும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் அடிப்படையில், நாடு முழுவதுமாக 65 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று மாலை 06.30 மணிக்கு முதல் முடிவையும், நாளை மதியம் 12.00 மணிக்குள் அனைத்து முடிவுகளையும் வழங்க முடியும் எனவும், அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

4990 வாக்களிப்பு நிலையங்களில் 09 ஆயிரம் வாக்கெண்ணும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்