சாய்ந்தமருது பள்ளிவாசல் தொடர்பில் ஹக்கீம் வெளியிட்ட கருத்துக்கு; தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு

🕔 January 9, 2018

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட நாட்டின் எந்தவொரு மதஸ்தலத்தின் நிருவாகத்தையும் கலைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை என்று, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கெப்பிட்டல் எம்.எம். வானொலியின் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாகத்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கலைக்கப் போகின்றார் என்று, அண்மையில் இறக்காமத்தில் வைத்து மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இது தொடர்பில், கெப்பிட்டல் எப்.எம். வினவிய போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டார்.

இதேவேளை, கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சாய்ந்தமருதிலிருந்து போட்டியிடும் சுயேட்சைக் குழுவினர் வெற்றி பெற்றாலும், சபையில் அமர முடியாது என்று, மு.கா. தலைவர் ஹக்கீம் இறக்காமத்தில் தெரிவித்தமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து வெளியிடுகையில்; “ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்படும் எவரையும் தடுக்க முடியாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்