ஏழு மணித்தியாலம் காத்திருக்க வைத்தனர், உள ரீதியாக பாதிக்கப்படுகிறேன்; மனவேதனைப் படுகிறார் மஹிந்த 0
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிப்பதற்கு நேற்று வியாழக்கிழமை, தான் வருகை தந்து, ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசனம் தெரிவித்துள்ளார். பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிப்பதற்கு, நேற்று வியாழக்கிழமை மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தார். இதற்கிணங்க,நேற்று முற்பகல் 10.00 மணியளவில் தனது சட்டத்தரணிகளுடன் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில்