முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவே, வடக்கிலிருந்து வெளியேற்றியதாகக் கூறுவது அவர்களை மேலும் அவமானப்படுத்துவதாக அமையும்; சுமந்திரன் 0
“வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது, சட்ட வரைவிலக்கணத்துக்கு அமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். மேலும், “பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்துவதாக அமையும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது