தன்னை கொல்ல ‘ரோ’ முயற்சிக்கிறதென, ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் பொய்யானவை 0
தன்னை கொலை செய்ய இந்தியாவின் ‘ரோ’ உளவுத்துறை நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக, ஊடகங்களில் வெளியான செய்திகள், உண்மைக்குப் புறம்பானவை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்படி தகவலை ஜனாதிபதி தெரிவித்தாக, இந்தியாவின் ‘த ஹிந்து’ செய்தித்தாள் இன்று புதன்கிழமை செய்தி