சீசெல்ஸில் மஹிந்த ஆரம்பித்த திட்டங்கள் தோல்வி 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – சீசெல்ஸ் நாட்டில் ஆரம்பித்த திட்டங்கள் தற்போது மூடப்படும் நிலைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவினால் 2014ஆம் ஆண்டு ஜூனில் சீசெல்ஸில் இலங்கை வங்கி, ஸ்ரீலங்கா காப்புறுதி, மிஹின் எயார் மற்றும் நவலோக்க வைத்தியசாலை ஆகியவற்றின் கிளைகள் திறக்கப்பட்டன. இதில் ஸ்ரீலங்கா காப்புறுதியின் செயற்பாடுகள் இரண்டு மாதத்தில் செயலிக்க செய்யப்படவுள்ளன.