இலங்கை அரசாங்கத்தின் ‘சின்னத்தனம்’ குறித்து, மஹிந்தவிடம் பாகிஸ்தான் ஜனாதிபதி சொன்ன தகவல் அம்பலம் 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த நிலையில், அந்த விஜயத்தை ரத்துச் செய்யுமாறு, பாகிஸ்தானிடம் இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டம் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹிந்த ராஜபக்ஷவிடம் பாகிஸ்தான் அரசாங்கத் தரப்பு, இந்த விடயத்தை எத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவின் மேற்டி விஜயம் திட்டமிட்டபடி நிறைவேறியிருந்தது.