புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியத்தை, ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு: ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும் அனுமதி கோரினார் 0
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018 இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை உண்மைக்குப் புறம்பானதென்றும், தடுப்புக் காவலிலுள்ள தனது சகோதரரைப் பழிவாங்கவே, இவ்வாறு போலிச் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். எதுவித சம்பந்தமும் இல்லாமல், தனது பெயரை பாவித்துள்ள