வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய வேண்டும்: உதய கம்மன்பில 0
அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை, நிதிக்குற்றப் புலனாய்வினர் கைது செய்ய வேண்டுமென பிவிதுரு ஹெலஉறும கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இன்று திங்கட்கிழமை கூறினார். பிணையில் விடுவிக்க முடியாத குற்றமொன்றினை விக்னேஸ்வரம் புரிந்துள்ளதாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டினார். பிவிதுரு ஹெலஉறும கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை