கல்முனை பிராந்தியத்தில், முன்னறிவித்தல் இன்றி மின்வெட்டு; மக்கள் விசனம் 0
– றிசாத் ஏ காதர் – இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி, அடிக்கடி மின் வெட்டு இடம்பெறுகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மின்சார சபை ஊழியர்கள், ஏற்கனவே திட்டமிட்டுள்ள திருத்த வேலைகளை மேற்கொள்ளும்போது, அமுல்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து, பொதுமக்களுக்கு அறியத்தருவதிலும் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.