இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக, தேசிய காங்கிரசின் பாலமுனை பிரகடனத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0
– மப்றூக் – அரசியலமைப்பின் நிர்ணயசபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை, தாம் முற்றாக நிராகரிப்பதாக, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாலமுனை பிரகடனத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘பாலமுனை பிரகடனம்’ எனும் பெயரில், தேசிய காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை பாலமுனை பொது விளையாட்டு மைததானத்தில் இடம்பெற்றது.