இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி நீக்கம் 0
இலங்கை மின்சார சபையின்15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்குச் சொந்தமான மின்சார விநியோகத்தை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுக்கு எதிராக போராட்டம் நடத்தி, இடையூறு விளைவித்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் சட்டமூலத்திற்கு எதிராக கடந்த ஜனவரி 03ஆம் திகதி முதல் – மின்சார சபையின் தொழிற்சங்க உறுப்பினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.