இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்களை, மீளவும் ஜோர்தான் அனுப்ப தீர்மானம் 0
இஸ்ரேலிய எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த போது – இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்கள், மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தகவலின்படி, இரண்டு இலங்கையர்களும் ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளனர்.