தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றிய வடிவேல் பரமசிங்கம் விபத்தில் மரணம் 0
அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் (NGOs Consortium) தவிசாளருமான, பிரபல சமூக செயற்பாட்டாளர் வடிவேல் பரமசிங்கம் இன்று நடந்த வாகன விபத்தில் சிக்கி மரணமானார். தம்பிலுவிலில் பிறந்து தம்பட்டையில் வசித்து வந்த வடிவேல் பரமசிங்கம் தமிழ், முஸ்லிம் இன நல்லுறவை கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியவராவார்.