பாகிஸ்தானுக்கான ஆப்கான் தூதுவரின் மகள் கடத்தல்: சித்திரவதையின் பின், விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிப்பு 0
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதுவரின் மகள், அடையாளம் அறியப்படாத நபர்களால் வெள்ளிக்கிழமையற்று கடத்தப்பட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டதாக, ஆஃப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்களால் அவருக்கு காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை நேற்று, சனிக்கிழமை, வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தூதர் நஜீபுல்லா அலிகைல் – மகள் சில்சிலா அலிகைல்