சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை; அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிப்பு 0
– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் அமைந்துள்ள சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி நிர்வாக அலகு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று செவ்வாய்கிழமை இந்த விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரான பைசர் முஸ்தபாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கல்முனைத் தொகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனியாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.