முஸ்லிம்களின் 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், ஒரு மாதத்தில் நாசம்: அமைச்சர் றிசாட் கவலை 0
– சுஐப் எம் காசிம் –இனவாதச் செயற்பாடுகள் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார்.மேலும், சதிகாரர்களின் வலைக்குள் சட்டமும் ஒழுங்கும் சிக்கிக் கிடக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.குருநாகல் கெகுணுகொல்ல சதகா