கிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன்

கிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன் 0

🕔25.May 2018

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா (62 வயது) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு, இரத்மலானை, ஞானாந்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 அளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அவர்களது வீட்டிற்கு முன்பாக

மேலும்...
பாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

பாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு 0

🕔24.May 2018

பாட்டியொருவர் தனது பக்கத்து தோட்டத்தில் 19 மாங்காய்களைத் திருடியதாகக் கூறப்படும் வழக்கினை, ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு அனுராதபுரம் பிரதம நீதிவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான ஹர்ஷ கெகுனாவல ஒத்தி வைத்தார். மேற்படி வழக்கு மேற்று புதன்கிழமை நீதிவான் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது, இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்த

மேலும்...
மாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்

மாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔24.May 2018

– ஏ.எல். நிப்றாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீட மாணவா்கள் சிலருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் அந்த மாணவா்கள் அனைவரினதும் அடிப்படை உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவா்கள் இன்று வியாழக்கிழமை கவன ஈா்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டனா். வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவா்களுக்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான மாணவா்கள் பேரணியாக

மேலும்...
சதொச – யூ லீட் ஒப்பந்தம் கைச்சாத்து

சதொச – யூ லீட் ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔24.May 2018

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான லங்கா சதொச நிறுவனமும், யூ லீட் (You Lead)  நிறுவனமும் முக்கிய ஒப்பந்தமொன்றை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை கைச்சாத்திட்டன. லங்கா சதொச நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மனித வலு மற்றும் ஊழியர்களின் திறன்களை விருத்தி செய்வதற்கான பயிற்சி நெறிகளுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பாகவே இந்த ஒப்பந்தம்

மேலும்...
தலைவரின் கரங்களை பலப்படுத்துவேன்; எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த பின்னர், நவவி தெரிவிப்பு

தலைவரின் கரங்களை பலப்படுத்துவேன்; எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த பின்னர், நவவி தெரிவிப்பு 0

🕔24.May 2018

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் ராஜினாமாச் செய்துள்ள போதும், கட்சிக்கும் தலைமைக்கும் தொடர்ந்தும் விசுவாசமாகவே இருக்கப்போவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அந்தப் பதவியிலிருந்து நேற்று புதன்கிழமை ராஜினாமாச் செய்த நவவி மேலும் கூறுகையில்; “கடந்த

மேலும்...
சஊதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அரசியல் எதிராளிகளால் கொல்லப்பட்டார்: ஈரான் ஊடகங்கள் தகவல்

சஊதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அரசியல் எதிராளிகளால் கொல்லப்பட்டார்: ஈரான் ஊடகங்கள் தகவல் 0

🕔24.May 2018

சஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் கொலை செய்யப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சஊதி மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு, பட்டத்து இளவரசராக இருந்த முகமது பின் நயாஃப்பை  நீக்கம் செய்துவிட்டு, தன் மகன் முகமது பின் சல்மானை பட்டத்து இளவரசர் ஆக்கினார். தந்தைக்கு 80 வயதுக்கு மேலாகிவிட்ட நிலையில், பாதுகாப்புத்துறை

மேலும்...
அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கின்றார்; நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு

அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கின்றார்; நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு 0

🕔24.May 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அர்ஜுன் மகேந்திரன் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கின்றமையை, அந்த நாட்டின் பொலிஸார், இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தி

மேலும்...
ஞானசார தேரர் குற்றவாளி: ஹோமாகம நீதிமன்றம் அறிவிப்பு

ஞானசார தேரர் குற்றவாளி: ஹோமாகம நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔24.May 2018

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, அச்சுறுத்தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளி என, இன்று வியாழக்கிழமை ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து, ஞானசார தேரர் அச்சுறுத்தினார் என

மேலும்...
பற்றுச் சீட்டு வேறு, நகை வேறு; சத்தியமிட்டுச் சொல்கிறார் சிலோன் ஜுவல் ஹவுஸ் உரிமையாளர்

பற்றுச் சீட்டு வேறு, நகை வேறு; சத்தியமிட்டுச் சொல்கிறார் சிலோன் ஜுவல் ஹவுஸ் உரிமையாளர் 0

🕔24.May 2018

‘கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம்’ எனும் தலைப்பில், புதிது செய்தித்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில், சிலோன் ஜுவல் ஹவுஸ் நிறுவவன உரிமையாளர், மறுப்புச் செய்தியொன்றினை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். கல்முனையிலுள்ள ‘சிலோன் ஜுவல் ஹவுஸ்’ நிறுவனத்தில் நகையைக் கொள்வனவு செய்து ஏமாந்ததாகக் கூறப்படும் முனாஸ் என்பவரின்

மேலும்...
நவவி எம்.பி. ராஜிநாமா; வெற்றிடமான பதவிக்கு இஸ்மாயில் நியமிக்கப்படலாம்

நவவி எம்.பி. ராஜிநாமா; வெற்றிடமான பதவிக்கு இஸ்மாயில் நியமிக்கப்படலாம் 0

🕔23.May 2018

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி – தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று புதன்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். தேர்தல் ஒப்பந்தத்துக்கு இணங்க, இந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அ.இ.ம.காங்கிரசுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியிருந்தது. இந்த நிலையில், நவவி ராஜிநாமா செய்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள

மேலும்...
தமிழ் மொழிச் சமூகங்களும், போருக்குப் பின்னரான புரிதல்களும்

தமிழ் மொழிச் சமூகங்களும், போருக்குப் பின்னரான புரிதல்களும் 0

🕔23.May 2018

– சுஐப்.எம். காசிம் – வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள் மீண்டும் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டிய தருணம் வந்துள்ளது. புலிகளின் போராட்டம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை, அரசியல் சித்தாந்த கோட்பாடுகளில் இத் தலைமைகளால் ஒன்றிணைக்க முடியாதுள்ளது. போராட்ட காலங்களில் பிரித்து வேறாக்கப்பட்ட தமிழ் மொழிச் சமூகங்களின் அரசியல்

மேலும்...
ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், லஞ்சம் பெற்ற போது கைது

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், லஞ்சம் பெற்ற போது கைது 0

🕔23.May 2018

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் – மாவத்தகம ஊழல் ஒழிப்பு பிரிவில் சேவை புரிந்து வரும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார். மதுபான மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல்

மேலும்...
ஆசையும் துயரங்களும்

ஆசையும் துயரங்களும் 0

🕔23.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – “எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 40,000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வரியை நீக்கி, எரிபொருள் விலை குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்துச் சேவைக்கும் ஓட்டோக்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் இதன் மூலம் விசேட சலுகை கிடைக்கும்”. மேலே உள்ளது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, வெளியிட்ட கொள்கைப்

மேலும்...
யார் அராஜகமானவர்? இப்போது சொல்லுங்கள்: மைத்திரிக்கு திருப்பியடிக்கிடிறார் நாமல்

யார் அராஜகமானவர்? இப்போது சொல்லுங்கள்: மைத்திரிக்கு திருப்பியடிக்கிடிறார் நாமல் 0

🕔22.May 2018

மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பலந்தொட பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறினார். நாட்டை பாதுகாத்த ராணுவத்தினர் இன்று தீவிரவாதிகள் ஆகிவிட்டனர். விடுதலை புலிகள் இன்று ரணுவத்தினர் ஆகிவிட்டனர். அமைச்சர் ராஜித சேனராத்ன அமைச்சரவை பேச்சாளர்

மேலும்...
‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’: சுவரொட்டி குறித்து, பொலிஸார் விளக்கம்

‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’: சுவரொட்டி குறித்து, பொலிஸார் விளக்கம் 0

🕔22.May 2018

‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’ என்ற சிங்கள வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தொடர்பில், முஸ்லிம் மக்களிடையே பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மேற்படி சுவரொட்டியானது, சிங்கள பாடசாலையொன்றின் நடைபவனி தொடர்பான பிரச்சாரம் தொடர்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’ என்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்