பாடகி சுசீலா உலக சாதனை; இன்னும் பாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிப்பு

இதனையடுத்து, இவரின் பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 17, 695 பாடல்ககளை இவர் பாடியுள்ளதாக கின்னஸ் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுசீலா கருத்து
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தமையினை அடுத்து, பாடகி சுசீலா தெரிவிக்கையில்;
“இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன்”
எனக்கு முதல் தேசிய விருது எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான ‘நாளை இந்த வேளை பார்த்து’ பாட்டுக்கு கிடைத்தது. பாடல் கம்போஸிங் போதே இந்தப் பாட்டுக்கு உனக்கு விருது கிடைக்கும்னு எம்.எஸ்.வி. சொன்னார். அதேபோல கிடைத்தது. எம்.எஸ்.வி. இசையமைப்பில் பாடி தேசிய விருது பெற்றமை பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.
இயக்குநர் கோபால கிருஷ்ணன் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். எனக்கு எப்போதுமே நடிப்பில் பிரியம் இருந்ததில்லை” என்று கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் சுசீலா நாற்பதாண்டுகளாக பாடிவருகிறார்.
பத்மபூஷன் , தேசிய விருது, கலைமாமணி விருது, ஆந்திர மாநில அரசு விருது ரகுபதி, பெங்கையா விருது மற்றும் கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல விருதுகளை பி.சுசீலா பெற்றுள்ளார்.