சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் எம்.பி ஹிருணிகாவுக்கு பிணை

🕔 July 22, 2024

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஹிருணிகா தாக்கல் செய்திருந்த பிணை மனு இன்று (33) ஹிருணிகா கொழும்பு நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு தெமட்டகொடையில் தனது டிபென்டர் வாகனத்தைப் பயன்படுத்தி இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியமை தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு ஜூன் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் 03 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொடை பகுதிக்கு கறுப்பு நிற டிபென்டரில் வந்த சிலர், தன்னைக் கடத்திச் சென்று தாக்கியதாக, பாதிக்கப்பட்ட அமில பிரியங்கர தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்