சாய்ந்தமருதுவில் கொலை: சந்தேக நபர் தலைமறைவு

🕔 July 21, 2024

பாறுக் ஷிஹான்

னது மகளின் கணவர் தாக்கியதால் – நபரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று சாய்ந்தமருது – பொலிவேரியன் கிராமத்தில் இன்று (21) அதிகாலை இடம்பெற்றது.

தாக்குதலுக்கு உள்ளாகி  மரணடைந்தவர் 62 வயதுடய  மீராசாயிப் சின்னராசா என்பவராவார். தற்போது, சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலையை செய்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய றிஸ்வி முகமட் அன்சார்  தலைமறைவாகியுள்ளார்.

திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடு – கொலையில் முடிவடைந்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடிக்கடி இவ்விடயம் தொடர்பாக – தனது மாமாவுடன் தகராறு செய்து வந்த மருமகன், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு  கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.டி.எம்.எல். புத்திக வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்